கட்டிக்கப் போகும் பெண்ணுக்கு
கண்ணியமாக மரியாதை கொடுத்து,
கேட்டுப் புரிந்து
கன்னி மனதை அறிய நினைக்கும்
காதலன் பார்த்தி....
காவல் துறை அப்பாவின்
புராணங்கள் கேட்டால்
கடுப்பாகும் மனதையும்
கட்டுப்படுத்திக் கொள்ளும்
காதலனே....
கல்யாண மண்டபத்தின் பெயரில்
காதல் சொன்ன கள்ளியை நினைக்க
கைகூடாத காதலின் காயம்
கனிந்தே துடிக்கிறது இதயத்தில்...
கலங்கிய கண்களுடன்
கண் முன்னே நின்ற கோலம்
கண்ணீரில் கரைகிறது மெல்ல...
கைவிட முடியாத நினைவாய்
காலம் முழுவதும் தொடரும் நிழல் வலியோ....