ஹாய் அக்கா. நான் முன்பே தென்னவன் கதை அமேசான்ல படிச்சிருக்கேன். பேஸ்புக் போஸ்ட் போட்டேன் ஆனா நீங்க பேஸ்புக்ல இல்லனு சொன்னாங்க. எனக்கு உங்க கிட்ட என் ரிவ்யூ எப்படி கன்வே பண்றதுனு தெரியல. சரண்யா அக்கா மூலமா உங்களுக்கு அனுப்பினேன். உங்க கதை மூனு நாலு படிச்சிருக்கேன். எல்லாமே எனக்கு ரொம்ப பிடிக்கும்

உங்க இன்ஸ்டா பேஜ்லயும் மெசேஜ் போட்டிருந்தேன் தேவிகுளம் கதைக்கு. உங்க எழுத்து என்னோட மோஸ்ட் ஃபேவர் அக்கா
#AV_REVIEW
#தென்வனும்_தேன்யாழியும்
ரொம்ப இதமான, எந்த டிவிஸ்ட், டர்ன்ஸ், படபடப்பு அழுகைனு எதுமே இல்லாம போகும் ஃபீல் குட் கதை. கதை முழுக்க ஒரு கியூட் ஸ்மைலோட படிச்சு முடிக்கலாம்

இதுல மெயின் நாயகன் நம்ம ஐ.பி.எஸ் தென்னவன் தேன்தமிழன். அவனோட ராஜாத்தி நம்ம தேன்யாழி
ஆனா இவங்க போக ஒரு ஜோடி இருக்கு. நம்ம தேனுவோட அண்ணா செந்தூரப் பாண்டியன், அன்ட் தென்னவனோட தங்கச்சி குந்தவை நாச்சியார்
என்னை போல செகேன்ட் ஹீரோ சின்ட்ரோம் உள்ளவர்கள் நம்பி படிங்க

ரெண்டாது ஹீரோக்கு ஹீரோக்கு இணையான சீன்ஸ் கதைல இருக்கு

நம்ம நாயகி கிராமத்து பைங்கிளி. கிராமத்துப் பெண்ணுக்கான அம்சங்கள் அத்தனையும் சொல்லிட்டு சடன் பிரேக் போட்டு அப்படிலாம் இவ கிடையாதுனு சொல்லும்போது செம்ம சிரிப்பு
இவ இவளோட தோழிகளோட சேர்ந்து அப்ப அப்ப குடுக்குற கௌண்டர்லாம் ஃபன்னியா இருந்தது
வயல்னா பாத்தி நடறதும் வாழ்க்கைனா வாத்தி திட்றதும் சகஜம்டி.. பச்ஞ் டயலாக் நல்லாருக்கேனு ஃபீல் பண்ணேன்

இவளும் தாமரையும் சேர்ந்து குந்தவைக்கு நல்ல தோழிகளா இருந்தாங்க
குந்தவை கடத்தல் சீன் சீரியஸா போகும்னு பார்தாத யாருடா நீங்கனு சிரிக்க வச்சுட்டாங்க

அதுலயும் கடத்தினவங்கள பாத்து சிரிச்சு பாசமா பேசிட்டு காப்பாத்த வந்தவன முறைப்பாளே
அமிர்தா அம்மா பேசின பத்து நிமிஷத்துல உறவு முறையோட ஐடென்டிபை பண்ணி அதை தென்னவனுக்கு எக்ஸ்பிலைன் பண்ணும்போது அய்யோ போதும்மா லிஸ்டு பெருசா போகும் போலயேனு சிரிப்பு தான்.
முன்ன ரெண்டு மனைவி திருமணம் கிரமாத்துல சகஜம். அப்படி ஒன்னு எழுதி இரண்டு பேரையும் நல்லவிதமாவே காட்டினது நல்லாருந்தது. அமிர்தா பண்ணது அவங்க சுயநலத்துக்குனாலும் அவங்க பூங்கொடியை விட்டுக்கொடுக்கலை. தேனுவையும் விட்டுக்கொடுக்கலை
தென்னவன் லவ் சொன்ன சீன் செம்மயா இருந்தது. சைட் அடிக்க வுமன்ஸ் காலேஜ் போவானாமே

இதுல உண்மைய ஒத்துகிட்டேன்னு பெருமை வேற
செந்தூரனுக்கு இவ சீவலப்பேரினு பெயர் வச்சதுலாம் செம்மயா இருந்தது
செந்தூரன் தேனுவை ஹர்ட் பண்ணது பாவமா இருந்தது. தென்னவன் கிட்ட இவ வந்து அழுத சீன் வருத்தமாவும் இருந்தது சிரிப்பாவும் இருந்தது. கல்யாணம் பண்ணுவோம் வாங்குறா. போனா எங்கம்மா கோச்சுக்கும் போங்குறா

இவனும் அழுவாத ராஜாதி சமாதானம் பண்றான், பெறகு இப்படி அழுவியா இனிமேனு திட்டவும் செய்றான். யார்ரா நீங்க
கதை என்டிங் நல்லா இருந்தது

கடைசில செங்கமலம் பேபிட்ட வேண்டின போல நந்தவனமா வந்து ஆசிர்வாதமும் வாங்கிட்டாங்க


கதை ரொம்ப கியூட்டா இதமா இருந்தது. அழகான கதைக்கு நன்றிகளும் மென்மேலும் எழுத என் வாழ்த்துக்களும் அக்கா