இடைவெளி – 3(2)

ஆனாலும்,  அவன் சொன்னதில் அவனுக்கே சிரிப்பு வந்துவிட,

“ஹேய் அது வேற, இன்ஃபாக்ட் ஜீவா கூட அப்படி இருக்கனும் தோணும், ஆனா எங்களுக்குள்ள ஏஜ் கேப். ப்ச்” என்றான்.

“என்ன ஏஜ் கேப்பா? ஜீவாவை விட உதய் இரண்டு வயசு சின்ன பையன்” என்று கணவனை பார்த்தாள் சாதனா.

அதற்கு அவனிடம் பதில் இல்லை. சாதனாவும் துருவிக் கேட்கவில்லை, விட்டுவிட்டாள். சில நிமிட மௌனத்திற்குப் பின்,

பரசுராம், “சது, சாரி” என்றான் குரல் கமற,

“அன்னிக்கு நான் பேசினது ரொம்ப அதிகம், உன்னை அது ரொம்ப ஹர்ட் பண்ணிருக்கும் தெரியுது, ஆனா நானும் அதனால ஹர்ட் ஆகியிருக்கேன் சது. போதும் இந்த இடைவெளி. என்னால இதை கடக்க முடியல, ஐ மிஸ் யூ. கோவம்னா அன்னிக்கு மாதிரி கத்து, இல்லை அடி.” என்றான்.

சாதனாவோ ஒரு பெருமூச்சுடன்,

“நீங்க ‘பேசினதை’ விட ‘நீங்க’ பேசிட்டீங்கன்னுதான் ராம் எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது., இருக்கு! உங்ககிட்ட  நான் அதை எதிர்ப்பார்க்கல, மாதவன், செல்வா தாத்தா எல்லாம் சொன்னாலும் உங்களை எனக்கு பத்து வருஷமா தெரியும். ஆபிஸ்ல தினமும் பார்த்திருக்கேன்.  நிறைய மரியாதை வைச்சிருந்தேன்” எனும்போதே அந்த மரியாதை சரிந்ததை சரியாகப் புரிந்து கொண்டான் பரசுராம்.

நிச்சயம் வலித்தது! அவனே அதை உடைத்திருக்கிறான் எனும்போது இன்னும் வலித்தது. ஆனால்,  எப்போதும் கடந்த காலத்தை நினைப்பவன் இல்லையே அவன், வருத்தங்கள் எல்லாம் வாழ்வோடு கலந்தது. இந்த நொடி, அதுதான் நிஜம் என உணர்ந்தவன்

“சது! உனக்கு அது கஷ்டமா இருந்திருக்கும் புரியுது, பட் தப்பே செய்யாத மனுஷங்க இல்லைதானே? நான் அந்த டைம் எமோஷனலா இருந்தேன், நானே என் கன்ட்ரோல்ல இல்லை. என்னை மீறின செய்கை, கோவம். இனியொரு சான்ஸ் கொடு,  உன்னை எனக்கு எவ்வளவு பிடிக்கும்னு காட்டினதே இல்லை நான். இந்த டைவர்ஸ் எல்லாம் வேண்டாம் சது..” என்றான் உருக்கமாக.

“சான்ஸ் கொடுத்தா?” என்று அவள் கேள்வியாக நிறுத்த

“சான்ஸ் கொடுத்தா நான் சாதா ராமன் இல்லை சாதனா ராமன்னு உனக்குப் ப்ரூவ் பண்றேன்” என்றதும் அவன் கையை விட்டு விட்டு வாய்விட்டு சிரித்தாள் சாதனா.

“ராம்… நீங்க இப்படியெல்லாம் பேசுவீங்களா? ஹாஹா அய்யோ …ராமா” என்று அவள் முகமெல்லாம் ப்ரகாசிக்க சிரித்தாள்.

“அசிஸ்டெண்ட் மேனேஜர் பேசக்கூடாது, ஹஸ்பண்ட் பேசலாம்” என்றான் கண்ணடித்து.

சாதனாவிற்கு அவன் செய்கையில் இன்னும் புன்னகை விரிந்தது. அவள் எங்கே விவாகரத்து எல்லாம் நினைத்தாள். சாதனாவிற்குக் கோபத்தில் வார்த்தை விடுவது பிடிக்காது, கொஞ்சம் அவகாசம் கொடுத்தால் அவளே சரியாகிவிடுவாள். அதற்குள் அவளின் தம்பிகள் செய்த தகிடுதத்தம் இது.

அவளைப் பொருத்தவரையில் வேண்டாம் என்றால் வேண்டாம்! முடிவெடுத்த பின் அதனை யோசிக்கவே மாட்டாள். எண்ணம் எதுவானாலும் உறுதிதான் அவளிடம்!

பரசுராமின் வருத்தம் சாதனாவிற்கும் கஷ்டமாக இருந்தது. இந்த இடைவெளியில் கொஞ்சம் வருத்தம் மட்டுமே வஞ்சியிடம் எஞ்சியிருந்தது! அதனால் அவனிடம்

“நீங்க வேண்டாம்னு நினைக்க அன்னிக்கு ஒரு நாள்தான் காரணம் ராம், ஆனா வேணும்னு நினைக்க நிறைய ரீசன்ஸ் இருக்கு” என்றதும் பரசுராம் முகம் பளிச்சென்றது.

“என்ன ரீசன்ஸ்?” என்று ஆவலாகக் கேட்க,

“அது நீங்க வேணும்னு நினைக்கிறப்ப சொல்றேன்” என்றாள் வேண்டுமென்றே. என்னவோ அவனை வம்பிழுக்கத் தோன்றியது. அதனால் டைவர்ஸ் விஷயத்தை சொல்லாதுவிட்டாள்.

முன்பு அவன் கல்லூரி சீனியர், பின் அவள் அலுவலகத்தில் வேலைப்பார்ப்பவன், கணவனாகிவிட்டாலும் அந்த பெரிய இடைவெளி கடக்கப்படாதே இருக்க, அதற்குள் ஒரு சண்டை! இயல்பாக அவர்கள் பேச, பழகவே இரண்டு மாதங்கள் ஓடிப்போயிருக்க, தம்பிகளிடம் இருக்கும் அந்த அன்யோன்யம் அவர்களிடம் இல்லை.

“அப்போ இப்ப வேண்டாமா?” பாவமாக அவன் முகத்தை வைத்திருக்க,

“டைவர்ஸ் வேண்டாம் சொன்னேன், டிஸ்டண்ட்ஸ் அப்படியே தான் இருக்கு!” என்று ஆணையாக சாதனா சொல்ல, அவளை நெருங்கி நின்றவன் முன்பு போலவே இடையில் கரம் வைத்துப் பிடித்தான்.

“போதும், இவ்வளவு டிஸ்டண்ட்ஸ்! நான் வேற உன் தம்பிங்க கிட்ட சபதம் போட்டிருக்கேன், என்னை சோதிக்காத சாதனா” என்றான் கெஞ்சலாக. மனைவி டைவர்ஸ் இல்லை என்று சொன்னதிலே அவனிடம் ஆயிரம் யானையின் பலம்.

சின்னதாக விஷயம் கிடைத்தாலும் அத்தனை சந்தோஷம் கொள்பவன், சாதனா சாதாரணமாகப் பேசிவிட, உற்சாகம் உள்ளமெங்கிலும்.

“என்ன சபதம்?” என்று அவள் கேட்க,

“அது..” என்றவன்

“அவனுங்களை சீக்கிரம் மாமா ஆக்குறேன் சொல்லிட்டேன்” என்றான் வேகமாக.

“சின்ன பசங்க கிட்ட என்ன பேச்சு இதெல்லாம் ராம்?” என்றாள் சாதனா கடுப்பாக.

“அவனுங்களா சின்ன பசங்க, கொஞ்சம் அசந்தா என்னை அக்கா புருஷன் பார்க்காம ஆன்லைன்ல வித்துருவானுங்க, கேடி பெலொஸ்” என்றான்.

“யார் அவனுங்க? எங்க மாமான்னு தான் பேச்சு வருது. ரொம்பத்தான் உங்களுக்கு சப்போர்ட் பண்றானுங்க” என்றாள் சாதனா கடுப்பாக.

“ச்ச, மச்சானுங்க மச்சானுங்கதான்மா! ஏதோ தவம் பண்ணியிருக்கேன்” என்று பரசுராம் சிலாகித்து பேச சாதனா முறைத்தாள்.

“என்னைப் பத்தி இப்படியெல்லாம் பேச்சு வரல” என்றாள் புருவம் உயர்த்தி. அவள் மனதுக்குள் அவர்களின் நட்புணர்வு கண்டு மகிழ்ச்சிதான், ஆனாலும்,  சீண்டினாள்.

“சது, என்ன நீ! நீதான் எனக்குப் ப்ரஸ்ட். அவனுங்க எல்லாம் வொர்ஸ்ட்! அந்த மாதவன் ஒரு மாங்கா மடையன், செல்வா ஒரு செங்கல் தலையன், அந்த சின்னவன் ஒரு வாலில்லாத சிம்பன்ஸி!” என்றதும் இன்னும் முறைத்தாள்.

“என் தம்பிங்கள என் முன்னாடியே இப்படி பேசுவீங்களா, போங்க நீங்க!” என்று அவன் கையை எடுத்துவிட்டு வேகமாக முன்னே  நடக்க,

“சது, சும்மா சொன்னேன். உன் ஹஸ்பண்ட் பாவம்டி” என்று அங்கேயே நின்று கத்தினான்.

“என்னடி நீ ஓவரா பண்ற? அப்படி பேசினாலும் முறைக்கிற இப்படி பேசினாலும் முறைக்கிற. இங்க பாரு நீ கோவப்பட்டா ஒன்னு மேல போய் இமாலயஸ்ல பரசுபாபா ஆகிடுவேன் இல்லை கீழே இறங்கி கங்காவுல போய் அகோரி ஆகிடுவேன்.” என்று பரசுராம் முகத்தை சுருக்கி சொல்ல

“அகோரி ஆகிடுங்க சரியா இருக்கும் ராம்” என்று சாதனா சிரிக்க, வேகமாக ஓடி வந்தவன் மனைவியின் தோளில் கைப்போட்டு,

“கோவம் போச்சா?” என்றான் அவள் சிரிப்பது கண்டு.

“கோவமெல்லாம்  இல்லை, வருத்தம் கொஞ்சம் இருக்கு.

“அப்போ இனி தனி ரூம் வேண்டாம்ல?” பரசு கண்கள் மின்ன மனைவியிடம் கேட்க,

“அப்படி ஒன்னும் நான் சொல்லலயே!” என்று அவனை வெறுப்பேற்றினாள்.

“சது?”

“ரூம் வந்துடுச்சு, கையை எடுங்க. டின்னர் சாப்பிடலாம்” என்றாள் சாதனா.

“எடுக்க மாட்டேன்” என்று அவன் பிடிவாதம் பிடிக்க,

“உங்களை எனக்குத் தெரியவே இல்லையோ ராம், எனக்குத் தெரியாம பரசுராம்குள்ள பல ராம் இருக்காங்களோ? முன்னாடியெல்லாம் நீங்க இப்படி கிடையாதே?” என்று சாதனா யோசனையாகப் பார்க்க,

“முன்னாடி இப்படியெல்லாம் கைவைச்சா உன் மூணு தம்பிங்களும் பஞ்சராக்கி பறவைகளுக்குப் பஃபே சாப்பாடா இந்த பரசுவை போட்டிருப்பானுங்க. ஹஸ்பண்டா இருக்கும்போதே மேடம் பக்கத்துல விடல, இதுல் முன்னாடி இல்லை பின்னாடி இல்லையாம்” என்றான் கடைசியில் முணுமுணுப்பாக.

“ராம், என்ன சாப்பிடுறீங்க. சொல்லுங்க” என்று சாதனா கேட்க,

“எனக்கு சாப்பிடுற மாதிரி எதுனாலும் சொல்லு சது” என்றவன் அறைக்குச் சென்று முகம் கழுவிவிட்டு கீழே இறங்கினான். இருவரும் ஒன்றாகவே உண்டனர், பின் சாதனா அவள் அறைக்குப் போய்விட, பரசுவின் பார்வை புரிந்தாலும் சாதனா இறங்கிடவில்லை.

இருள் சூழ்ந்த அந்த பொழுதில், ஹிமாலய மலைத்தொடர் வெண்மேகமாகக் காட்சித் தர, அருகே இருந்த அருவியின் ஓசை நிசப்தத்தில் இன்னும் நன்றாகக் கேட்டது. ஒரு பக்கம் நண்பர்களாக வந்தவர்கள் எல்லாம் பாட்டு பாடியபடி அந்த இரவை உற்சாகமாக்கிக் கொண்டிருக்க, தனியாக இருந்த பரசுராம் பால்கனியில் நின்றுகொண்டு மாதவனுக்கு அழைத்தான்.

“என்ன மாம்ஸ், எனக்குக் கூப்பிட்டிருக்க? என்னமோ சபதமெல்லாம் போட்டீங்க?”

“உங்கக்காவைக் கட்டிட்டு சபதம்தான் போட முடியும், போடா” என்றான் கடுப்பாக

“என்ன இது எங்க அத்தான் கிட்ட எனர்ஜியே இல்லை?” மாதவன் அக்கறையாகக் கேட்க,

“பின்ன என்னடா? கோவமில்லன்றா, ஆனா ரூமுக்குள்ள சேர்க்க மாட்டேங்கிறா. என் ஒருத்தனுக்கு மட்டும் எட்டாயிரத்துக்கு ரூம், கொஞ்சம் கூட எக்கானமிக் சென்சே இல்லை அவகிட்ட” என்றான்.

“யோவ் நான்சென்ஸ் மாமா, எட்டாயிரத்துக்கா ஃபீல் பண்ற? கட்டின பொண்டாட்டியை விட்டு பிரிஞ்சு இருக்கோம்னு ஃபீல் பண்ணலையா நீ? இங்க டைவர்ஸ் நோட்டீஸ் பார்த்துட்டு அந்த ஃபீல் பண்ணின?” என்று மாதவன் கடுப்புடன் கேட்க,

“டேய் அதான் டா சொல்றேன். பக்கத்து ரூம்தானே? ஆனா பக்கமா சேர்க்க மாட்டேங்கிறா? சரியான ராங்கி! ராட்சஸி!” என்று திட்டினான்.

“பக்கத்து ரூமா? பார்த்துய்யா வந்தா உன்னை பங்கம் பண்ணிடுவா, அப்புறம் டைவர்ஸூதான்!!! ஊஊஊஉ” என்று மாதவன் வம்பு செய்ய, கதவு தட்டப்படும் ஓசையில்,

“இருடா, யாரோ கதவைத் தட்டுறாங்க” என்று பரசுராம் கதவைத் திறக்கப் போனான்.

பார்த்தால் சாதனா அவனை முறைத்துக் கொண்டு நின்றாள்.

“கொஞ்சம் மெதுவா பேசுங்க சார், பக்கத்து ரூம்ல டிஸ்டர்ப் ஆகுது” என்று அவள் சொன்ன தோரனையே எல்லாம் கேட்டுவிட்டாள் என்று உணர்த்த,

‘ஏழரையை ஏர்ல கூட்டிட்டு வந்துட்டேன் போலயே, அங்கேயும் பேசித்தான் அவளோடு சண்டை, இங்கேயுமா?’ என்று முழித்தான்.

“யோவ் மாமா, என்னாச்சு பேசு” என்று மாதவன் கத்துவது அருகே நின்ற சாதனாவுக்கும் கேட்க,

“பேசுங்க சார்” என்று சாதனா சொன்ன விதத்தில் எங்கே பேச்சு வந்தது பரசுராமிற்கு?

error: Content is protected !!
Scroll to Top